 
			அய்யா துணை
அகிலஉலக அய்யாபதிகள் கூட்டமைப்பு(IPAC) நடத்திய ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரம் அய்யா வைகுண்டரின் 193 வது அவதார தினவிழா
தலைமை: மேதகு தமிழக ஆளுநர் R. N Ravi
			இடம்: அழகு மகால், செங்குளம், திருநெல்வேலி மாவட்டம்
தேதி : 28- Feb – 2025
முந்தைய நாள் மாலை: 4.30 மணி அளவில் மேதகு தமிழக ஆளுநர் திரு. R.N ரவி அவர்கள் திருச்செந்தூர் அவதாரப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.
28-Feb-2025 காலை 10:00 மணி அளவில் மேதகு தமிழக ஆளுநர் திரு. R.N ரவி அவர்கள் தலைமையில் திரு அவதாரதின விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அய்யாவழி நூலை பல்வேறு மொழிகளில் (தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி) வெளியிட்டு, பல்வேறு அய்யாவழி ஆளுமைகளை நமது மேதகு தமிழக ஆளுநர் கெளரவித்தார்.
 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			






